எங்களை பற்றி

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன  சங்கத்திற்கு  அலுவலகம் அமைக்க, சென்னையின் முக்கிய பகுதியான எழும்பூரில் திரு. K.T ஜானகிராம் நாடார் அவர்கள் நிர்வாகத்தின் போது நிலம்
வாங்கப்பட்டது.
 
மேற்கொண்டு திரு.K.பரமசிவ நாடார் அவர்கள் தலைமையில்,  திரு K.T.கோசல்ராம் நாடார் அவர்களது முன்னிலையில் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 
திரு. S இராமச்சந்திர நாடார் அவர்களது தலைமையில் கட்டிடம் கட்டப்பட்டு, மாவட்ட நீதிபதி திரு. S.கணேசன் M.A. B.L. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 தற்போது புதிதாக 5 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு 16.9.2024 அன்று திறப்பு விழா காண்கிறது 
 
நமது சங்கம் நாடார் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நாடார் இனத்தை குறைத்து மதிப்பிட்டு பேசினாலோ, சரியான எதிர்ப்பு கொடுத்து அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காதவாறு காத்து வருகிறது. 
தமிழகம் முழுவதும் தெரிந்த ஒரு சமுதாய அமைப்பாக நெல்லை நாடார் சங்கம் தலைநிமிர்ந்து செயலாற்றி கொன்னுயிருக்கிறது .